சொன்னார் குறை!

சொன்னார் குறை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:53-54.

53இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும் பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும்,
54அநேக காரியங்களைக்குறித்துப் பேசும்படிஅவரை ஏவவும் தொடங்கினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
தன்னால் கூடும் என்பவனும்,
தவறேன் என்று சொல்பவனும்,
முன்னாள் தன்குறை உணர்வதுதான்,
முதலில் கற்கும் இறையறிவாம்.
பன்னாள் இப்படி நாம் கேட்டும்,
பலவித முறையில் வழிபட்டும், 
சொன்னார் குறையே தேடுகிறோம்
சொத்து நமக்கு குறையறிவாம்!
ஆமென்.

Leave a Reply