சேவல் கூவும் முன்னே!
நற்செய்தி மாலை: மாற்கு 14:72.
“உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, ‘ சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ‘ என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவு கூர்ந்து மனம் உடைந்து அழுதார்.”
நற்செய்தி மலர்:
இருமுறை சேவல் கூவும் முன்னே,
இயேசுவைப் பேதுரு மறுதலித்தார்.
ஒருமுறை முன்பே உரைத்தது எண்ணி,
உடைந்தவர் தமையே அருவருத்தார்.
திருமறைச் செய்தி பலமுறை கேட்டும்,
தெய்வத்தின் மக்களோ இதை மறந்தார்.
மறுமுறை கேட்கும் பேற்றைப் பெற்றார்,
மனந்திரும்பின் அவர் சிறந்தார்!
ஆமென்.
