சிறிய கழுதை போதும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:29-31.
29 அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபித்தபோது, தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி:
30 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
31 அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
எதை விரும்பி எடுப்பீர் என்று
இங்கொரு தேர்தல் நாம் வைத்தால்,
குதிரை போதும், கழுதை வேண்டாம்,
குதித்துச் சொல்வார் மக்களின்று.
பதை பதைக்கும் சண்டைகள் கண்டு,
போரா, அமைதியா எனக்கேட்டால்,
சிதை விரும்பார் சீக்கிரம் சொல்வார்,
சிறிய கழுதை போதுமென்று.
ஆமென்.