கோர்த்தாடும் மானிடரே …

கோர்த்தாடும் மானிடரே!
நற்செய்தி மாலை: மாற்கு 6:21-24
“ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், ‘ உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன் ‘ என்றான். ‘ நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன் ‘ என்றும் ஆணையிட்டுக் கூறினான். அவள் வெளியே சென்று, ‘ நான் என்ன கேட்கலாம் ? ‘ என்று தன்தாயை வினவினாள். அவள், ‘ திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள் ‘ என்றாள்.”
நற்செய்தி மலர்:
பார்த்தாடும் பரத்தையர்கள்
பறித்திடுவார் வீடு.
ஆர்த்தாட வழிவகுக்க,
அழிந்திடுமே நாடு.
கோர்த்தாடும் மானிடனே,
கொணர்கின்றாய் கேடு!
வேர்த்தோடி விட்டுவிட்டு,
விண்ணரசை நாடு!
ஆமென்.

Leave a Reply