கொன்று, திருடி, ஏமாற்றி,
கொடுமை செய்வோர் வாழ்கின்றார்.
இன்று இவரைப் பாராட்டி
ஏற்போர் நாட்டில் ஆள்கின்றார்.
அன்று இறைவன் உரைத்திருந்தும்,
அவற்றை மறப்போர் வீழ்கின்றார்.
நன்று எதுவென உணர்பவர்தான்,
நன்மை வழியில் மீள்கின்றார்!
-கெர்சோம் செல்லையா.
பின்குறிப்பு:
யோபின் நூல் 34:16-33 -ஐ வாசித்து,
இறைவாக்கு நிறைவேறக் காத்திருப்போம்.
![Image may contain: 1 person](https://scontent-mrs1-1.xx.fbcdn.net/v/t1.0-9/18157273_1446917178672413_7175505441315767480_n.jpg?oh=3a5a21f2d309a8102a3aa023138f7dcf&oe=598CE9AE)