கூனல் நிமிரட்டும்!

பன்னெடுங்காலம் நிமிராதிருக்கும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:10-13.

10ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.11அப்பொழுது பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.12இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.

கிறித்துவில் வாழ்வு:
பன்னெடுங் காலமாய்க் கூனிப்போனோர்,
பலபேர் இருக்கிறார், நம்நாட்டிலே.
இன்னிலம் மட்டுமே இவர் நோக்குகிறார்;
ஏறிட்டுப் பாரார், விண்வீட்டிலே.
என்செய்தால் இக்கூனல் அகலும்,
என்று ஆய்வோம், நல்லேட்டிலே.
அன்பின் இயேசு தொட்டிட நிமிர்வார்;
அதற்கு வேண்டுவோம் திருக்கூட்டிலே!
ஆமென்.

Leave a Reply