குற்றமில்லை, ஆயினும் தண்டனை!

குற்றமற்றோருக்குத் தண்டனையா?  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:13-16.  

13  பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்து,

14  அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.

15  உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.

16  ஆனபடியால் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.  

கிறித்துவில் வாழ்வு:  

குற்றம் இல்லை என்றறிந்தும்,  

கொடுத்தார் தண்டனை இயேசுவிற்கு;  

கற்றும் கேட்டும் தெரிந்திருந்தும், 

கடமை தவறுதல் ஏன், எதற்கு?  

பற்றும் பாவம்  பரிசு தரும்;  

பாங்காய்க் கடமை செய்யார்க்கு.  

அற்றுப் போகும் நாளும் வரும்;  

அந்தோ போகிறார், அழிவதற்கு! 

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

Leave a Reply