கிறித்து பிறப்பின் வாழ்த்து!

கிறித்து பிறப்பின் வாழ்த்து!


எத்தனை எத்தனை பண்டிகை வந்தும்,

ஏன் மறந்தோம்  இறை நயம்?

அத்தனை முறையும் உண்டுடுத்தோம்;


அதனால் மறைந்ததா உளக் கயம்?

இத்தனை ஆண்டுகள் இழந்தது போதும்.

இனி கேட்போமா கிறித்தியம்?

வித்தென ஈந்து  விளைச்சலறுப்போம்;

விண் மகன் தருவார்  நம் வயம்!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply