கிறித்துவின் வாக்கு

கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:34-35.

34 அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

கிறித்துவில் வாழ்வு:
எப்படியாகும் என்றே கேட்கும்,
எனது அருமை நண்பர்களே,
இப்படிச் செய்ய இறையால் கூடும்
ஐயம் தவிர்த்து எண்ணுங்களே.
அப்படி மைந்தன் பிறந்ததினால்தான்,
ஆண்டவர் என்கிறோம் அன்பர்களே;
ஒப்புமையில்லா இப்பெரும் செயலால்,
உமக்கும் மீட்பு, நம்புங்களே!
ஆமென்.

Image may contain: text

Leave a Reply