கிறித்துவின் பெயரில் அந்திக்கிறித்து!
நற்செய்தி மாலை: மாற்கு13:5-6.
“அதற்கு இயேசு அவர்களிடம் கூறியது: ‘ உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘ நானே அவர் ‘ என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர்.”
நற்செய்தி மலர்:
கடைந்தெடுத்தக் கயவரைக்கூட
கடவுள் என்றே எழுதுகிறார்.
கடவுளின் மைந்தன் என்று சொன்னால்,
கண்டிப்பாகத் தொழுதிடுவார்!
அடைய இயலா மீட்புற்றோர்தான்,
ஆண்டவருக்குள் வாழுகிறார்.
அந்திக்கிறித்து யாரெனத் தெரிந்து,
அவரைக் கை கழுவிடுவார்!
ஆமென்.
![Image may contain: text](https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-9/s851x315/15895129_1332885176742281_1771824029482510417_n.jpg?oh=0ea5066e8dfca9f0e747902e432184e2&oe=5918FBB7)