காவேரி நீரும், கைவிரிக்கும் அரசும்!

காவேரி நீரும், கைவிரிக்கும் அரசும்!

பாதி வாழ்நாள் படிகள் ஏறி,
பண்பாய்ப் பேசிக் கெஞ்சினோம்.
நீதி அரசர் ஆணைகள் மீறி,
நீர் தர மறுத்தார், அஞ்சினோம்.

ஆதி கால மனிதர் நிலைக்கு,
அழைத்த அரசைக் கொஞ்சினோம்.
மீதியாக இருப்பது மானம்;
மீட்பரை நம்பின் மிஞ்சுவோம்!

– வருந்தும்,
கெர்சோம் செல்லையா.

Image may contain: outdoor, water and one or more people
LikeShow More Reactions

Comment

Leave a Reply