காவேரி நீரும், கைவிரிக்கும் அரசும்!
பாதி வாழ்நாள் படிகள் ஏறி,
பண்பாய்ப் பேசிக் கெஞ்சினோம்.
நீதி அரசர் ஆணைகள் மீறி,
நீர் தர மறுத்தார், அஞ்சினோம்.
ஆதி கால மனிதர் நிலைக்கு,
அழைத்த அரசைக் கொஞ்சினோம்.
மீதியாக இருப்பது மானம்;
மீட்பரை நம்பின் மிஞ்சுவோம்!
– வருந்தும்,
கெர்சோம் செல்லையா.
![Image may contain: outdoor, water and one or more people](https://scontent-hkg3-1.xx.fbcdn.net/v/l/t1.0-0/q83/p526x296/14520542_1236802223017244_8545917557492194902_n.jpg?oh=6f42e722dfbd189e42e24a0a69205c76&oe=5862105F)