காணாத தொற்று!

கொரோனா தரும் அறிவு!


காணாத தொற்றுநோய் ஓன்று,

கடவுளைக் காட்டுதே இன்று.

பேணாத அவ்வறிவில் நின்று,

பேசவும் வைக்குதே இன்று.

கோணாத உதவிகள் நன்று;

கொரோனா சொல்லுதே இன்று.

நாணாது வழங்குவீர் என்று,

நாடும் வேண்டுதே இன்று!


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply