கவலைப்படாதீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:22-23.
22பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். |
23ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது. கிறித்துவில் வாழ்வு: உயிரைக் கொடுத்தவர் உணவு கொடாரா? உடலைக் கொடுத்தபின் உடை மூடாரா? பயிரைக் கொடுத்தவர் நீரை விடாரா? பரிசாய்க் கொடுத்து நிறைத்திடாரா? வயிறை நிரப்பும் கவலை விடாரே, வருந்தல் நிறுத்தும், வலி கொடாரே! மயிர்கள் எண்ணித் தரையில் இடாரே, மன்னித்தும்மைக் காத்திட்டாரே! ஆமென். |