கல்லாய்ப் போனோர்!

கல்லாய்ப் போன நெஞ்சுள்ளார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:39-40.

39  அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள்.

40  அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

கல்லாய்ப் போன நெஞ்சுள்ளார்,

கடவுள் பெயரால் வருகின்றார்.

சொல்லால் வடித்த பொய்களுடன்,

செயலில் தீங்கும் தருகின்றார்.

இல்லார் பற்றில் உயர்ந்துள்ளார்;

இதனால் இயேசுவை அடுக்கின்றார்.

பொல்லார் தடுக்க முயன்றாலும்,

புனிதர் நற்பதில் கொடுக்கின்றார்!

ஆமென்.

Leave a Reply