கல்லறையும் கேட்கும்!
நற்செய்தி: யோவான் 5:28.
28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
நல்வழி:
கல்லறைக்கும் காது உண்டு;
கடவுட்சொல் அது கேட்கும்.
நல்லவர்க்கும் வாழ்வுண்டு.
நம்பிக்கையே நமை மீட்கும்.
சில்லறைக்கும் துரு உண்டு.
சீர்வாக்குச் சான்று தரும்.
இல்லையென்றால் எது உண்டு?
இரண்டுமுறை சாவு வரும்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.