கல்லறையில் காணும் மனிதர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:26-28.
26 பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள்.
27 அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான்.
28 அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்.
கிறித்துவில் வாழ்வு:
நல்லுரை கேட்க விருப்பம் இன்றி,
நாயாய் நரியாய் அலைந்திட்டார்;
கல்லறைதனையே வீடாய்க் கருதிக்
காலிலும் கையிலும் விலங்கிட்டார்.
பொல்லான் உரைக்கும் பொய்யை நம்பி,
பூணும் உடையையும் உரிந்திட்டார்.
இல்லார் இவரும் நேர்மை அணிவார்;
இறைமகன் இவரையும் புரிந்திட்டார்!
ஆமென்.
