கலகம் வெடிக்கும், உலகம் துடிக்கும்!

கலகம் வெடிக்கும், உலகம் துடிக்கும்!
நற்செய்தி மாலை: மாற்கு 13:7-8.
“போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கும் பொழுது நீங்கள் திடுக்கிடாதீர்கள். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இவையே முடிவாகா. நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்; பல இடங்களில் நில நடுக்கங்கள் ஏற்படும்; பஞ்சமும் உண்டாகும். இவை கொடும் வேதனைகளின் தொடக்கமே.”
நற்செய்தி மலர்:
கலகம் வெடிக்கும், உலகம் துடிக்கும்;
கடவுளின் பிள்ளையே கலங்காதே.
விலகும் துன்பம், விடியும் இன்பம்,
வீணாய் அழுது குலுங்காதே.
நிலத்தில் நடுக்கம், நேர்வழி இடுக்கம்,
நெஞ்சம் தளர்ந்து தயங்காதே.
அலகை தொடங்கும் அவலம் முடியும்,
ஆண்டவரின்றி இயங்காதே!
ஆமென்.

Image may contain: one or more people and text

Leave a Reply