கற்பு வேண்டும்!
நற்செய்தி மாலை: மாற்கு: 7:5-8.
“ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, ‘ உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்? ‘ என்று கேட்டனர். அதற்கு அவர், ‘ வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ‘ இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண் ‘ என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
உடலைக் கழுவி கோயில் சென்றால்,
உள்ளில் தூய்மை வந்திடுமோ?
சடலம் கூட கழுவப்படுதே!
சடங்குகள் மீட்பைத் தந்திடுமோ?
மடமை வழியில் நடத்திச் செல்ல,
மனிதன் அல்ல நம் தெய்வம்!
கடமை, வாழ்க்கை, எண்ணம் எதிலும்,
கற்பு வேண்டும், நாம் உய்வோம்!
ஆமென்.
