கண்ணீரில் கழுவிக் குளிக்கின்றோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:21.
21 இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள்.
கிறித்துவில் வாழ்வு:
ஒண்ணோ இரண்டோ மூணோ என்றால்,
ஒருவழியாக முடக்கிடுவோம்.
எண்ண முடியா இன்னல்கள் வந்தால்,
எப்படி நாங்கள் அடக்கிடுவோம்?
கண்ணீரில்தான் கழுவியும் குளித்தும்,
காலம் முழுதும் கிடக்கின்றோம்.
விண்ணின் அரசே, விரைந்து வாரும்.
விடியலைத் தேடி நடக்கின்றோம்!
ஆமென்.
![No automatic alt text available.](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/45703412_2079946908702767_383178208847069184_n.jpg?_nc_cat=111&_nc_eui2=AeEDorn0cXnYkDaqv6jby81RZ5nHM-jJcp4ng8bv624BVaK1El1OUidw7fqHf6NhlcWKaAmzpeWXfzTn1aLI3F6gl2feRNiKGYxn0EgHj-bbZQ&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=09a278b704c4c185e822557d667c0e8c&oe=5C6A9D34)