கண்ணீரில் கழுவிக் குளிக்கின்றோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:21.
21 இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள்.
கிறித்துவில் வாழ்வு:
ஒண்ணோ இரண்டோ மூணோ என்றால்,
ஒருவழியாக முடக்கிடுவோம்.
எண்ண முடியா இன்னல்கள் வந்தால்,
எப்படி நாங்கள் அடக்கிடுவோம்?
கண்ணீரில்தான் கழுவியும் குளித்தும்,
காலம் முழுதும் கிடக்கின்றோம்.
விண்ணின் அரசே, விரைந்து வாரும்.
விடியலைத் தேடி நடக்கின்றோம்!
ஆமென்.
