கடுகளவு பற்று!

கடுகளவு பற்று வேண்டும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:5-6.

5   அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.

6   அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

கிறித்துவில் வாழ்வு:

காட்டத்தி மரத்தை வேருடன் பிடுங்க,

கடுகளவில் பற்று தாருமென்பேன்.

நீட்டத்தில் குறைந்த நிலையிலா வாழ்வில்,

நிகழும் செயல்கள் பாருமென்பேன்.

ஆட்டத்தில் அமிழ்வோர் அறிவினில் எழும்ப,

அவருக்கும் தூது கூறுமென்பேன்.

ஓட்டத்தின் முடிவில் உம்மைக் காண்பேன்;

உலகை மீட்க வாருமென்பேன்!

ஆமென்.

Leave a Reply