ஒவ்வொரு இந்தியரும் உணரட்டும்!
பஞ்சம் நமக்கு வந்த நாளில்,
பல ஊர் சென்று குடி புகுந்தோம்.
வஞ்சம் இன்றி அவரும் சேர்த்தார்;
வாழும் நிலையில் நாம் உயர்ந்தோம்.
தஞ்சம் தந்த அவரை இன்று,
தாழ்ந்தோர் என்று மிதிக்கின்றோம்.
அஞ்சாதவர்கள் நிமிர்ந்தெழுந்தால்,
அறியோம் நம்நிலை, மதித்திடுவோம்!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: one or more people, sky and outdoor](https://fb-s-a-a.akamaihd.net/h-ak-xta1/v/t1.0-0/s480x480/16105939_1344337178930414_883030024939037812_n.jpg?oh=20c8efe986165681985db385481bfcfe&oe=5910024D&__gda__=1495582722_35fe00d5b9b65db953fb9a654b7695e9)