ஒரு வாக்கு போதும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:6-8.
6 அப்பொழுது இயேசு அவர்களுடனேகூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில் போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல;
7 நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
8 நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான்; என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.
கிறித்துவில் வாழ்வு:
எருவாக்கி எம்மை இழிநிலை தள்ளும்,
ஏற்றத் தாழ்வின் உலகத்திலே,
திருவாக்குரைத்துத் தீமைகள் அகற்றும்;
தெய்வமே, உம்மை அண்டிவந்தோம்.
உருவாக்கின நாள் உரைத்ததுபோன்று,
உமது வல்லமை வெளிப்படவே,
ஒரு வாக்குரைப்பில் நோய்கள் அகலும்;
உம்மிடம் மட்டும் மண்டியிட்டோம்!
ஆமென்.
![Image may contain: text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/47230085_2106354219395369_5581673428399685632_n.jpg?_nc_cat=108&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=4a08f8e0e6f4928ca7d69946abf43821&oe=5CAB67AD)