ஒடுக்கப்பட்டோர்!

ஒதுக்கப்பட்டோர் உயர்வார்!
கிறித்துவுவின் வாக்கு: லூக்கா 16:22-24.
22  பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.23  பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.24  அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
கிறித்துவில் வாழ்வு:
ஒதுக்கப்பட்ட ஏழையர் அன்று,
உருகிய காட்சி கண்டோரே,
செதுக்கப்பட்ட சிலைபோல் நின்று,
சொல்கிற சாட்சி கேட்பீரே.
பதுக்கப்பட்ட செல்வம் என்று,
பரிவின் இரக்கம் கொண்டோரே,
பிதுக்கப்பட்ட எளியர் இன்று,
பேசும் விடுதலை ஏற்பீரே!
ஆமென்.

Leave a Reply