ஏழையின் பரிசு!

ஏழையின் பரிசு!
நற்செய்தி மாலை:மாற்கு 14:6-9.
” இயேசு அவர்களிடம், ‘ அவரை விடுங்கள். ஏன் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே. ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யமுடியும். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார். உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்; இவரும் நினைவு கூறப்படுவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
ஏழையொருத்தி ஈந்த பரிசை,
எங்கும் புகழும் இறைமகனே,
கோழையாகி ஒளியும் நானோ,
கொடுக்கும் பண்பில் குறைமகனே.
நாளை என்று அலைக்கழிக்காமல்,
நன்மை வழங்கும் இறைமகனே,
வேளையறிந்து நானும் கொடுக்க
வேண்டும் அன்பு நிறைமகனே!
ஆமென்.

Image may contain: 1 person, glasses, text and close-up
LikeShow More Reactions

Comment

Leave a Reply