ஏழைக்குதவி, பின் பாடு!

ஏழைக்குதவி, பின் பாடு!
நற்செய்தி மாலை: மாற்கு 14:27-28.
“இயேசு அவர்களிடம், ‘ நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், ‘ ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும் ‘ என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
இன்னோர் ஆட்டை வெட்டும்போது,
எதுவும் பேசா வெள்ளாடு,
தன்னாயரின் கொலையைக் கண்டு,
தகவலுக்கிடுமோ கூப்பாடு?
முன்னே நிற்பவர் எவரென்றாலும்,
முதற்கண் உதவுதல் கடப்பாடு.
என்னினமெனினும் இதுதான் செய்தி;
ஏழைக்குதவி, பின் பாடு!
ஆமென்.

Image may contain: outdoor and nature

Leave a Reply