ஏறிட இறங்குவோம்!

ஏறிட இறங்குவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 10:35-37.
“செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், ‘ போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம் ‘ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘ நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ‘ என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும் ‘ என்று வேண்டினர்.”
நற்செய்தி மலர்:
வாழ்வுயர்த்தும் வாஞ்சை கொண்டு;
வரம்பு மீறிக் கூறுகிறார்.
தாழ்நிலையின் மக்கள் கண்டு,
தலை மிதித்து ஏறுகிறார்.
பாழ்நிலமாய்ப் பலபேர் உண்டு;
பதவி வெறியில் மாறுகிறார்.
ஏழ்மையான இயேசு கண்டு,
இறங்கினோரே தேறுகிறார்!
ஆமென்,

Image may contain: text

Leave a Reply