எவ்வழி தலைவன்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:19-20.
19 காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்து கொள்ளப்பட்டபோது,
20 தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, யோவானையும் காவலில் அடைத்துவைத்தான்.
கிறித்துவில் வாழ்வு:
எவ்வழி தலைவர் செல்கின்றாரோ,
அவ்வழிதானே தொண்டரும் செல்வர்.
செவ்வழி எதுவென அறியாத் தலைவர்,
சேர்க்கும் இடமோ படுகுழி, சொல்வர்!
இவ்வகைத் தலைவர்கள் இருப்பதனால்தான்,
இன்று நம்நாட்டில் எதற்கும் பஞ்சம்.
ஒவ்வொரு மனிதரும் இதனைப் புரிந்தால்,
ஒழுகும் ஆறாய் ஒழுக்கம் மிஞ்சும்!
ஆமென்.
![Image may contain: one or more people, shoes and text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/39522014_1972019502828842_5858377576912781312_n.jpg?_nc_cat=0&oh=e45a26a5ac6098a56d0c90443a3b7df1&oe=5BFC8967)
Posts