எளியர் வாழ வேண்டும்!

எளியரை மீட்கும் ஆட்சி!
தன்னலம் கொண்டு ஆள்வதும் வேண்டாம்;
தவற்றினை விற்று வாழ்வதும் வேண்டாம்.
பொன்பொருள், தரகு வாங்கவும் வேண்டாம்; 
பொது நலன் யாவும் தூங்கவும் வேண்டாம்.


இன்னில எளியர் மீண்டிட வேண்டும்;
இதற்கென நிற்போர் ஆண்டிட வேண்டும்.
அன்னிலை அமைய இறையை வேண்டும்;
அவரது அன்பு நிறைய வேண்டும்!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply