எல்லோருக்கும் சொல்லுவோம்!

எருசலேம் தொடங்கி…….

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:47-48.  

கிறித்துவில் வாழ்வு: 
எருசலேம் தொடங்கி எல்லா நாடும் 
இறை அரசிற்குள் வரவேண்டும்.  
குருசு வழியில் அன்பைப் பாடும்   

கிறித்துவின் மீட்பு உறவேண்டும். 

ஒரு சிலர் மட்டும் ஓங்கப் போடும் 
ஒவ்வாத் திட்டமும் அறவேண்டும். 
அருளும் நலமும் நிரம்பிக் கூடும்;

அனைவரும் ஆசி பெற வேண்டும்!   

ஆமென்.  
-கெர்சோம் செல்லையா. 

Leave a Reply