எம் வேலை, உம் வேலை!
எண்ணிக்கையைப் பெருக்கும் நோக்கில்
இயேசுவின் வாக்கு உரைக்கவில்லை.
மண்ணில் மாபெரும் அரசு அமைத்து,
மாற்றார் வீழ்த்தவும், குரைக்கவில்லை.
கண்ணில் காணா கடவுளின் அன்பைக்
கருத்தாய்ச் சொல்வதே, எம் வேலை.
பண்ணும் தீச்செயல் தவறென உணர்ந்து,
பற்றால் மீளவதோ, உம் வேலை!
ஆமென்.
– கெர்சோம் செல்லையா.