எப்படி புகழ் வரும்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா :4:36-37.
36 எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
37 அவருடைய கீர்த்தி சுற்றிலுமிருந்த நாடுகளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று.
கிறித்துவில் வாழ்வு:
பெயரும் புகழும் யாரால் கிடைக்கும்?
பெரியவர் பலருக்குத் தெரியவில்லை!
உயரும் மதிப்பை எதுதான் உடைக்கும்?
உண்மையற்றோர் இதைப் புரியவில்லை!
துயரும் மகிழ்வும் கலந்த வாழ்வில்,
தொண்டால்தானே புகழ் கிடைக்கும்.
வயிறும் வாயும் வாழ்க்கை என்றால்,
வந்த புகழைப் பழி உடைக்கும்!
ஆமென்.
