எப்படித் தெரியும்?

எப்படித் தெரியும்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:43-45.
43 நல்ல மரமானது கெட்ட கனிகொடாது, கெட்ட மரமானது நல்ல கனிகொடாது.
44 அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச் செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.
45 நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.
 
கிறித்துவில் வாழ்வு:
மண்ணின் செழுமை மரங்களில் தெரியும்.
மரத்தின் தன்மை கனிகளில் தெரியும்.
கண்ணாம் விளக்கில் காட்சிகள் தெரியும்.
காட்சியை ஆய்ந்தால் கருத்தும் புரியும்.
உண்மை, பொய்மை எப்படித் தெரியும்?
உரைக்கும் வாக்கின் செயலில் தெரியும்!
விண்ணின் விருப்பு யாருக்குத் தெரியும்?
விரும்பிப் பணிவோம், நமக்கும் புரியும்!
ஆமென்.

Leave a Reply