என் முகம் முதுகு தெரியவில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:37.
37 மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
கிறித்துவில் வாழ்வு:
இரண்டு கண்கள் என்முன்னிருந்தும்,
என்முகம், முதுகு தெரியவில்லை.
உருண்டு திரண்டு அவைகள் உழன்றும்,
உடன் நிற்பவரைப் புரிவதில்லை.
முரண்டு பிடிக்கும் எனக்கு வேண்டும்,
முழுமை காட்டும் கண்ணாடி.
பிறண்டி, பிறரைப் பழிக்காத்திருக்க,
பிடிப்பேன் திருமறை முன்னாடி!
ஆமென்.
![Image may contain: 1 person](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/46503513_2095003447197113_6059199493075632128_n.jpg?_nc_cat=105&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=7cc3160cf2a418402c94cb8c3ba9714e&oe=5C76E7E1)