என்று வருவீர்?
நற்செய்தி மாலை: மாற்கு 13:32-33.
“ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது. கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.”
நற்செய்தி மலர்:
என்று வருவீர், எப்படி எடுப்பீர்,
என்று அறியா வாழ்வு இது.
இன்று இதனை நினைக்கும் எனக்கு,
இரங்கித் தருவீர் உம் தூது.
சென்று போன நாட்களின் தவற்றைச்
செப்பனிடுவீர், புதியது;
அன்று சொன்ன வாக்கின்படியே,
அடியனும் விழிப்பேன், நல்லது!
ஆமென்.
![No automatic alt text available.](https://fb-s-d-a.akamaihd.net/h-ak-xlp1/v/t1.0-0/p370x247/16142881_1353280528036079_7980776649011360414_n.jpg?oh=442bdccce24953401dc0fb1ed02f23ce&oe=5918EACB&__gda__=1493060148_6845794adb3977c1e6836762890f16f5)