எனக்கு அரசன் யார்?

எனக்கு அரசன் யார்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:27-28.

27  அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.

28  இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார்.

கிறித்துவில் வாழ்வு:

நானே எனக்கு அரசன் என்று,

நம்பி நடப்பது குறையாகும்.

தானே செல்பவன்போல இன்று,

தன்னை அடைக்கும் சிறையாகும்.

வானே நமது வாழ்விற்கென்று,

வகுத்த வழிதான் முறையாகும்.

தேனே தோற்கும் இனிமை இன்று,

தெரியும் நல்லிடம் இறையாகும்!

ஆமென்.

Leave a Reply