எந்தன் வாயைப் பூட்டுமே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:63-65.
63 இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து,
64 அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி,
65 மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
கண்ணைக் கட்டி முகத்திலறைந்து,
கடுஞ்சொல் எடுத்துத் திட்டவே,
விண்ணின் அரசர் பேசாதிருந்தார்;
விடுதலை வாழ்வு காட்டவே.
மண்ணின் மக்கள் நம்மைச் சுற்றி,
மதியிலா வாக்கு கொட்டவே,
எண்ணிப் பார்ப்போம் இயேசுவையே;
எந்தன் வாயும் பூட்டுமே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.