எந்தன் வாயைப் பூட்டுமே!

எந்தன் வாயைப் பூட்டுமே!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:63-65.  

63  இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து,

64  அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி,

65  மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

கண்ணைக் கட்டி முகத்திலறைந்து,

கடுஞ்சொல் எடுத்துத் திட்டவே,  

விண்ணின் அரசர் பேசாதிருந்தார்;   

விடுதலை வாழ்வு காட்டவே.    

மண்ணின் மக்கள் நம்மைச் சுற்றி,  

மதியிலா வாக்கு கொட்டவே,    

எண்ணிப் பார்ப்போம் இயேசுவையே;   

எந்தன் வாயும் பூட்டுமே!    

ஆமென்.   

-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply