எத்தனை எத்தனை யூதாசோ?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:47-48.
47 அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்.
48 இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
காட்டிக் கொடுக்க யூதாசன்று,
கட்டி அணைத்து முத்தமிட்டான்.
ஈட்டிக் கையுடன் வந்தவருக்கு,
இயேசைப் பிடிக்க ஒத்துழைத்தான்.
ஏட்டில் பார்க்கும் நம்முள் இன்று,
எத்தனை எத்தனை யூதாசோ?
கேட்டின் வழியில் ஆட்டுவித்து,
கெடுக்க முயலும் பிசாசோ?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.