எதையெதையோ நம்பிடுவார்!

எதையெதையோ நம்பிடுவார்!
நற்செய்தி மாலை: மாற்கு 16:12-14.
“அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை. இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதை நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்.”
நற்செய்தி மலர்:
எதையெதையோ நம்பிடுவார்;
ஏமாந்தும் விழுந்திடுவார்.
கதை கதையாய்ச் சொன்னவற்றை,
கடவுளெனத் தொழுதிடுவார்.
சிதை நெருப்பு அண்டுமுன்னர்,
சீரறிவு பெறுபவர் யார்?
விதைமணியாய் விழுந்தெழுந்த
விண்ணரசின் பிள்ளைகளார்!
ஆமென்.

Image may contain: plant, tree, outdoor and nature

Leave a Reply