எண்ணும் மரியாள்!
இறைவாக்கு: லூக்கா 2:18-20.
18 மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
19 மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.
20 மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள்.
இறைவாழ்வு:
பிஞ்சுக் குழந்தை மடியிலிருக்கப்
பேசும் மேய்ப்பர் சொல் கேட்டாள்.
அஞ்சும் நிலையில் அவளிருந்தாலும்,
அதனைப் பொருட்படுத்தாது விட்டாள்.
நெஞ்சில் நினைத்து வைத்தது எல்லாம்,
நேர்மையாளர் வாக்காகும்.
கெஞ்சிக் கேட்கும் நாமும் எண்வோம்;
கிறித்து வாக்கே வாழ்வாகும்!
ஆமென்.
![Image may contain: 1 person](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/q81/p526x296/31223887_1812802878750506_2367660022533455872_n.jpg?_nc_cat=0&oh=8b9d1b94c39c2c37cc9b1a3521bcd1c0&oe=5B5E72C1)