ஊமை போன்றும் இருப்போம்!

ஊமை போன்றும் இருப்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 13:9-11.
“நீங்கள் கவனமாயிருங்கள்; உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள்; தொழுகைக்கூடங்களில் உங்களை நையப்புடைப்பார்கள்; என் பொருட்டு ஆளுநர் முன்னும் அரசர் முன்னும் நிறுத்தப்பட்டு அவர்கள் முன் எனக்குச் சான்று பகர்வீர்கள். ஆனால் எல்லா மக்களினத்தவர்க்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும்.அவர்கள் உங்களைக் கைதுசெய்து கொண்டு செல்லும்போது என்ன பேசுவது என நீங்கள் முன்னதாகவே கவலைப்பட வேண்டாம்; அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படுவதையே பேசுங்கள். ஏனெனில் பேசுவோர் நீங்கள் அல்ல. மாறாக, தூய ஆவியாரே.”
நற்செய்தி மலர்:
தீமை வெறுத்து, தெய்வம் தொழவே,
திருமறை வாக்கு மொழிகின்றோம்.
திறமையாளர் என்றவர் நினைத்துத்
தீங்கு செய்தும் பொழிகின்றோம்.
ஊமை போன்றும் இருக்கச் சொன்னீர்;
உம்சொற்படியே இருக்கின்றோம்;
உரைக்கும் ஆவியர் வாக்கை மட்டும்,
ஒலிக்க வாயைத் திறக்கின்றோம்!
ஆமென்.

Image may contain: one or more people and people sitting

Like

 

Like

 

Love

 

Haha

 

Wow

 

Sad

 

Angry

Comment

Leave a Reply