நமது எதிரி!

நமது எதிரி!

நற்செய்தி மாலை: மாற்கு 10:41-42. “இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், ‘ பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.” நற்செய்தி மலர்: ஆட்டிப் படைப்பதை ஆட்சி என்றார்; அதையே மனிதர் மாட்சி என்றார். காட்டிக் கொடுப்பதை அறிவு என்றார்; கயமைத் தன்மையோ திறமை என்றார். வீட்டில் தொடங்கிய ஊழல் என்பேன்; வெளியிலும் படர்ந்த சூழல் என்பேன். நாட்டின் எதிரி யார் என்பேன்? நமது மேட்டிமை, பார் என்பேன்! ஆமென்.

Image may contain: text

Leave a Reply