உழைப்போம், உயர்வோம்!
உழைப்பவர் இழப்பவராகி விட்டால்,
உயராதென்றும் ஒரு நாடு.
பிழைப்பவர் ஏற்க மறுத்து விட்டால்,
பெருமையின் முடிவு சுடுகாடு!
அழைத்தவர் உழைப்பை மதித்துவிட்டால்,
அதுதான் சிறந்த பண்பாடு.
தழைப்பவர் இனிமேல் யாரென்றால்,
தாழ்நிலை ஏழை எனப் பாடு!
-கெர்சோம் செல்லையா.
