உழைப்போம், உயர்வோம்!
உழைப்பவர் இழப்பவராகி விட்டால்,
உயராதென்றும் ஒரு நாடு.
பிழைப்பவர் ஏற்க மறுத்து விட்டால்,
பெருமையின் முடிவு சுடுகாடு!
அழைத்தவர் உழைப்பை மதித்துவிட்டால்,
அதுதான் சிறந்த பண்பாடு.
தழைப்பவர் இனிமேல் யாரென்றால்,
தாழ்நிலை ஏழை எனப் பாடு!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: one or more people](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31727827_1818839858146808_896967648770785280_n.jpg?_nc_cat=0&oh=878c5a52294311ab39006ca18614b1df&oe=5B98ADCF)