உள்ளம் ஒடுக்கா நோன்பு!

உள்ளம் ஒடுக்கா நோன்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:33-35.
33 பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம்பண்ணிக்கொண்டு வருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.
34 அதற்கு அவர்: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா?
35 மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
உடலை ஒடுக்கிப் புசியாதிருந்தால்,
உங்கள் ஆன்மா அடங்கிடுமோ?
குடலை வருத்திப் பசியாயிருந்தால்,
குறை, குற்றங்கள் முடங்கிடுமோ?
கடவுள் அன்பைப் பகிரவென்றால்,
கடுமை நோன்பும் முறையாகும்.
விடுதலைதரும் நம் இயேசு இருக்க,
விலைக்குக் கேட்டால், குறையாகும்!
ஆமென்.

Image may contain: shoes
LikeShow More Reactions

Comment

Leave a Reply