உலோத்துவின் நாள் போன்று!

உலோத்துவின் நாளைப் போல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:28-29.

28  லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.

29  லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.

கிறித்துவில் வாழ்வு:
உலோத்துவின் நாளில் நடந்ததுபோலே,
இன்றைய நாளிலும் இலாத்துகிறார்.
ஆத்திரக்காரராய் அடையத் துடித்தே,
அடங்கா உணர்ச்சியை ஏத்துகிறார்.
பூத்திடும் பிஞ்சு நிலையில் பழுத்தே,
புவியில் பலபேர் பீத்துகிறார்.
காத்திருக்காது அழிவோர் பார்த்தே,
கடவுளில் வருவீர், தேத்துகிறார்!
ஆமென்.

Leave a Reply