உம்மிடம் எம்மிடம் தேடுகிறார்!
நற்செய்தி மாலை: மாற்கு 13:21-23.
“அப்பொழுது யாராவது உங்களிடம், ‘ இதோ, மெசியா இங்கே இருக்கிறார்; அதோ, அங்கே இருக்கிறார் ‘ எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம். ஏனெனில் போலி மெசியாக்களும் போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறிதவறச் செய்ய அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்து காட்டுவர். நீங்களோ கவனமாயிருங்கள். அனைத்தையும் முன்னதாகவே உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.”
நற்செய்தி மலர்:
யாரையும் நம்பா நிலைமைக்கு,
இன்றைய ஊழியர் தள்ளிவிட்டார்.
எதெற்கெடுத்தாலும் காசென்று,
எங்கும் வாங்கி அள்ளிவிட்டார்.
ஊரை ஏய்க்கும் ‘மெசியாக்கள்’,
ஒளியின் தூதராய் ஆடுகின்றார்
உலகோர் கிறித்து எங்கென்று,
உம்மிடம் எம்மிடம் தேடுகின்றார்!
ஆமென்.
![Image may contain: 1 person, smiling](https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/15940595_1338984586132340_7467788890963519854_n.jpg?oh=b60c50244089294f1f91d3a5a2e6afe0&oe=591CE726)