உமது வாக்கின்படியே ஆகட்டும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:38.
38 அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
கிறித்துவில் வாழ்வு:
நிந்தை அவச்சொல் நெடுங்கதையாய் வரும்;
நிம்மதி குலைக்கும் உறவுகளே தரும்.
இந்த நிலையைப் புரிந்த எவரும்,
ஏற்பாரோவென நீவிரே கூறும்.
தந்தை இறையின் வாக்கே போதும்;
தவறு வராது அதில் எப்போதும்.
எந்தத் துன்பம் எவர் தந்தாலும்,
இறையின் விருப்பே நன்மையாகும்!
ஆமென்.
![Image may contain: 1 person, text](https://scontent-sin6-2.xx.fbcdn.net/v/t1.0-9/21752032_1585415688155894_2299666188645242820_n.jpg?oh=01dd8ae75694e77810b17b62ebc01e9c&oe=5A180367)
![](https://fb-s-a-a.akamaihd.net/h-ak-fbx/v/t1.0-1/p50x50/21106539_1569030743127722_4215887715402134347_n.jpg?oh=a88ac03e61582c1708fa8813493af2cd&oe=5A599CFB&__gda__=1511480483_1c9ebf158e38715f043cebd970fd1885)