உண்மை உண்டோ?

உண்மை உண்டோ?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:11-12.

11  அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?

12  வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?

கிறித்துவில் வாழ்வு:

உண்மை என்றால் என்னவென்று,

உலகோர் கேட்கும் காலமிது.

நன்மை செய்யும் இறையுமின்று,

நம்முள் தேடும் பண்புமிது.

அன்றே கொன்ற நாட்களன்று;

அரசிலும் தேடவேண்டுமிது.

என்றானாலும் சொல்வேன் ஒன்று;

இன்றும் விடுதலை கொடுக்குமிது!

ஆமென்.

Leave a Reply