உணர்ச்சிப் பேச்சு!

Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its  origin from emotion recollected in tranquility. De… | Thought provoking  quotes, Quotes, Poetry

உணர்ச்சிப் பேச்சு!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:33.    

33  அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:  

உணர்ச்சிப் பெருக்கால் பொழிதல் வேறு;  

உணர்த்தும் இறையால் மொழிதல் வேறு.    

கணக்குப் பார்த்து உழைத்தல் வேறு;  

கடவுளுக்காக இழத்தல் வேறு.  

மணக்கும் கிறித்தவத் தாழ்மை வேறு;  

மனிதர் விரும்பும் ஆளுமை வேறு.  

இணைக்கும் இறையால் வேறு வேறு, 

என்றறிந்தால் பேறு பேறு!   

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply