இழிஞன் வினையால் இறந்தீரே!
நற்செய்தி மாலை: மாற்கு 15:37-39.
” இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார். அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, ‘ இம்மனிதர் உண்மையாகவே இறைமகன் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
பொன்னிலும் மேலாம் நன்னருள் மீட்பை,
புவியோர் பெறவே பிறந்தீரே.
என்னுயிர் மீட்க, இன்னுயிர் கொடுத்தீர்;
இழிஞன் வினையால் இறந்தீரே.
சென்னிறக் குருதி என்னையும் கழுவ,
சிலுவையில் யாவையும் மறந்தீரே.
இன்னிலத்தோர்கள் அன்பினில் வாழ,
இறைவழி திறந்துச் சிறந்தீரே!
ஆமென்.
![Image may contain: one or more people and outdoor](https://fb-s-d-a.akamaihd.net/h-ak-xpl1/v/t1.0-0/p235x350/18485632_1466684700028994_5810670275245651774_n.jpg?oh=d5b92872059e4dca1b59159308df77c4&oe=59ABA605&__gda__=1504245415_91c9768655310c79568447978d74942c)