இழப்பு இல்லை, இறையே!
கிறித்துவின் வாக்கு:18:28-30.
28 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.
29 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றாரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,
30 இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
அளந்தளிக்கும் இறைமுன் சென்று,
அடியன் தந்தது என்பதுவும்,
இழந்துபோன இன்பம் என்று,
இன்னொரு கணக்கெழுதுவதும்,
வளர்ந்து நிற்கும் பலரிடம் இன்று,
வாடாதிருக்கும் குறையாகும்.
தளர்ந்து போகாதளிப்போம் நன்று.
தருவது யாவும் இறையாகும்!
ஆமென்.